search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகவல் அறியும் உரிமை சட்டம்"

    • கச்சத்தீவு கிடைத்தால் தான் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
    • கச்சத்தீவு விவகாரத்தை அறிவியல் பூர்வமாகவும், சட்ட பூர்வமாகவும் பா.ஜ.க அணுகி வருகிறது.

    கோவை:

    கோவையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசாரத்துக்கு மத்தியில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கச்சத்தீவு தொடர்பாக சில நபர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை தற்போது வெளியில் கொண்டு வந்துள்ளோம்.

    கச்சத்தீவை கொடுத்ததற்காக இலங்கையிடம் இருந்து இந்தியாவிற்கு ஏதும் கிடைக்கவில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.

    கச்சத்தீவு தொடர்பாக மேலும் ஒரு தகவலையும் ஆர்.டி.ஐ.யில் கேட்டுள்ளோம். கச்சத்தீவு கிடைத்தால் தான் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

    கச்சத்தீவு விவகாரத்தை அறிவியல் பூர்வமாகவும், சட்ட பூர்வமாகவும் பா.ஜ.க அணுகி வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்ணாமலை என் சிலிப்பர் செல் என்று கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, சீமானுக்கு சின்னமும் இல்லை. வாக்கும் இல்லை. அதனால் அவர் சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.

    • 2021 ஆம் ஆண்டில், காத்திருப்புப் பட்டியலில் இருந்த சுமார் 2.53 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன
    • 2024-ம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 45.86 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு ரயில்வேக்கு ரூ.43 கோடி வருவாய் கிடைத்துள்ளது

    2021 ஜனவரி மாதம் முதல், 2024 ஜனவரி மதம் வரை ரத்து செய்யப்பட்ட காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளின் மூலம், ரெயில்வே துறைக்கு ₹1229.85 கோடி வருவாய் கிடைத்துள்ளது

    மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் பாண்டே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த தகவலை ரெயில்வே துறை வெளியிட்டுள்ளது.

    2021 ஆம் ஆண்டில், காத்திருப்புப் பட்டியலில் இருந்த சுமார் 2.53 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலமாக இந்திய ரெயில்வேக்கு ரூ.242.68 கோடி வருவாய் கிடைத்தது. 2022-ம் ஆண்டு, ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 4.6 கோடியாக அதிகரித்தது. இதன் மூலமாக வருவாய் ரூ.439.16 கோடியை எட்டியது. 2023-ம் ஆண்டில், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 5.26 கொடியாகவும், இதன் மூலம் ரூ.505 கோடி வருவாய் கிடைத்தது.

    2024-ம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 45.86 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு ரயில்வேக்கு ரூ.43 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    மொத்தத்தில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12.8 கோடிக்கும் அதிகமான காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன.

    ரெயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் உறுதிசெய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை ரத்துசெய்வதற்கு 60 ரூபாய் கட்டணமாக விதிக்கப்படும். அதேசமயம், ஏசி வகுப்புகளுக்கான கட்டணம் ரூ.120 முதல் ரூ.240 வரை வசூலிக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் மட்டும் தான் முழு தொகையும் திரும்ப பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறியா பருவத்தில் பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்கும் வாலிபர்கள் மீது முறைப்படி புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போக்சோ மற்றும் பாலியல் வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் இளம் பருவத்திலேயே பெண்கள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்து இருப்பதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் திருமண வயதை எட்டும் முன்னரே தவறான பழக்க வழக்கத்தால் இளம்பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரியவந்தது.

    இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் 8742 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் பேரில் போக்சோ சட்டமும் பாய்ந்துள்ளது.

    தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இளம் பருவத்தில் பெண்கள் கர்ப்பமாவது அதிகரித்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3429 பெண்கள் இளம் பருவத்திலேயே கர்ப்பம் ஆகி உள்ளனர்.

    இதன் மூலம் இந்த வேதனை பட்டியலில் தர்மபுரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கரூர் மாவட்டத்தில் 1057 இளம்பெண்களும், வேலூரில் 921 பேரும் கர்ப்பம் தரித்துள்ளனர்.

    சிவகங்கையில் 439 பேர், திருச்சியில் 349 பெண்கள், நெல்லையில் 347 பேர், மதுரையில் 260 பேர் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

    தூத்துக்குடியில் 162 பெண்களும், தேனியில் 104 பேரும், திருவள்ளூரில் 79 பேரும், கன்னியாகுமரியில் 73 பெண்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் 3 ஆண்டில் 72 பெண்களும், தஞ்சாவூரில் 70 பெண்களும், புதுக்கோட்டையில் 33 பெண்களும் இளம் வயதிலேயே கர்ப்பமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.



    சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தகவல் மூலமாக 905 இளம்பெண்கள் கர்ப்பமாகி இருப்பது தெரிய வந்திருப்பது போல கஸ்தூரிபா ஆஸ்பத்திரி அளித்த தகவலில் 230 பேரும், தாய்-சேய் மருத்துவமனை தகவலில் 92 பேரும் கர்ப்பம் ஆகி இருப்பது தெரியவந்திருக்கிறது. இதன் மூலம் சென்னையில் 3 ஆண்டில் அறியா பருவத்தில் கர்ப்பமான இளம்பெண்களின் எண்ணிக்கை 1317 ஆக உள்ளது. இதன்மூலம் இந்த பாதிப்புகள் பட்டியலில் தர்மபுரிக்கு அடுத்து 2-வது இடத்தில் சென்னை இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதையும் மீறி வாலிபர்களுடன் பழகி கர்ப்பமாகும் இளம்பெண்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இப்படி அறியா பருவத்தில் பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்கும் வாலிபர்கள் மீது முறைப்படி புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போக்சோ மற்றும் பாலியல் வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இருப்பினும் இதுபோன்ற இளம் வயது கர்ப்பங்களை தவிர்க்க விழிப்புணர்வு பிரசாரங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவரும் வக்கீலுமான ஜி.கே.பிரகாஷ் கலந்து கொண்டு விளக்கம் அளித்தார்.
    • நிகழ்ச்சியில் முதல்வர் தங்கராஜன், தாளாளர் கீதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ராயல் ஏஞ்சல் டுடோரியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவரும் வக்கீலுமான ஜி.கே.பிரகாஷ் கலந்து கொண்டு விளக்கம் அளித்தார்.

    இதில் போக்குவரத்து விதிகள், மனித உரிமைகள், பொதுவான சட்ட விதிகள் போன்றவை விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் தங்கராஜன், தாளாளர் கீதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பாதுகாப்பு பிரிவில் 1.70 லட்சம் இடங்கள் காலியாக உள்ளது.
    • ரெயில்வேயில் 3.12 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரெயில்வே மந்திரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி :

    மத்திய அரசின் ரெயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரெயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதற்கு பதில் அனுப்பியுள்ள ரெயில்வே அமைச்சகம், ரெயில்வே துறையில் 2.74 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளது. இதில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரிவுகளில் மட்டுமே 1.70 லட்சத்துக்கு அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறியுள்ளது.

    இது தொடர்பாக ரெயில்வே அனுப்பியுள்ள பதிலில், '2023 ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி இந்திய ரெயில்வேயில் குரூப் சி (நிலை-1 உள்பட) பிரிவில் 2,74,580 பணியிடங்கள் காலியாக உள்ளன' என்று கூறியுள்ளது.2023 ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி ரெயில்வேயின் பாதுகாப்பு பிரிவில் குரூப் சி (நிலை-1 உள்பட) பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 9,82,037 ஆகும் என கூறியுள்ள ரெயில்வே அமைச்சகம், இதில் 8,04,113 ஊழியர்கள் பணியில் உள்ளதாகவும், 1,77,924 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

    முன்னதாக ரெயில்வேயில் 3.12 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கேள்விகள் கேட்கும்போது, வினோதமான பதில்களை அதிகாரிகள் தருகின்றனர்.
    • தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியதன் நோக்கம் கேள்விக்குறியாகி வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டரிடம் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையாக இருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்துவதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையான தகவல்களை தருவது தான் தகவல் அறியும் உரிமை சட்டம். ஆனால் மின்வாரிய அலுவலகங்களில் தகவல் உரிமை சட்டத்தை முறையாக கையாளாமல் சட்டத்தை அடியோடு முடக்க சில அலுவலர்கள் காரணமாக உள்ளனர். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மற்றும் அவினாசி கோட்ட மின்சார வாரிய பொது தகவல் அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை.

    திருப்பூர் மாவட்டத்தில் மின்வாரிய துறை சார்ந்த கேள்விகள் கேட்கும்போது, வினோதமான பதில்களை அதிகாரிகள் தருகின்றனர். பல கேள்விகளுக்கு பதிலே அளிப்பதில்லை. இதனால் தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியதன் நோக்கம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • 2016-17 ல் 354.2 கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது.
    • 2017-18 ல் 11.15 கோடி நோட்டுகளும், 2018-19 ல் 4.66 கோடி நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையாக பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டன. புதிதாக ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

    ஆனால் சமீப காலமாக புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணிகை வெகுவாக குறைந்து விட்டது.

    இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை கடந்த 2 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வெளியான தகவல்கள் பின்வருமாறு:-

    31.3.2020-க்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியானது.

    2016-17 ல் 354.2 கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது. 2017-18 ல் 11.15 கோடி நோட்டுகளும், 2018-19 ல் 4.66 கோடி நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டது.

    நாடுமுழுவதும் கைப்பற்றப்பட்ட ரூ.2,000 கள்ளநோட்டுகள் 2016 ல் 2,272 ஆக இருந்து 2017 ல் 74,898-ஆக அதிகரித்தது. அதுவே2020 ல் 2.44 லட்சம் என உச்சம் அடைந்துள்ளது.

    புழக்கத்தில் உள்ள நோட்டுக்களின் மொத்த மதிப்பில் ரூ.2000 நோட்டுகளின் பங்கு 31.3.2020 ல் 22.6 சதவீதமாக இருந்து 31.3.2021 ல் 13.8 சதவீதமாக சரிந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை 31.3.2020 ல் 274 கோடியாக இருந்து 31.3.2021 ல் 245 கோடியாக சரிந்தது. மேலும் சரிந்து 31.3.2022ல் 214 கோடியாக உள்ளது.

    புழக்கத்தில் உள்ள அனைத்து நோட்டுகளின் மொத்த மதிப்பு 31.3.2021 ல் ரூ.28.27 லட்சம் கோடியாக இருந்து 31.3.2022 ல் ரூ.31.05 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

    2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டுள்ளதோடு புழக்கத்தில் உள்ள நோட்டுகளும் படிப்படியாக குறைந்து வருவதால் மதிப்பிழப்பை நோக்கி செல்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    • தகவல் அளித்த பின் ஓராண்டு வரை மேல்முறையீடு செய்யாமல் இருந்தால் கோப்புகளை முடிக்கலாம்
    • எக்காரணம் கொண்டும், சீல் வைக்கப்பட்ட அசல் விண்ணப்பத்தை திருப்பி அனுப்ப கூடாது.

    திருப்பூர்:

    சென்னை அண்ணா நிர்வாக பணி பயிற்சி கல்லூரி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான பயிற்சி முகாம் 2 நாட்கள் திருப்பூரில் நடந்தது. அரசுத்துறை அலுவலர்கள், பொது தகவல் அலுவலராக செயல்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சி கல்லூரி கூடுதல் இயக்குனர் ராஜேந்திரன் அளித்த பயிற்சியில் அறிவுறுத்தியதாவது:-

    பொது தகவல் அலுவலர்கள், கைவசம் உள்ள தகவல்களை அப்படியே வழங்கலாம். வழங்க முடியாதபட்சத்தில், அந்த காரணத்தையும் கூற வேண்டும். அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின் தகவல்களை அளிக்கலாம்.கேள்விகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால் தகவல் அளிக்க தேவையில்லை. பொதுமக்கள் மட்டுமல்ல, அரசு அலுவலர்களும் இச்சட்டத்தில் தகவல் கேட்கலாம். விண்ணப்பத்தில் 10 ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் தகவல் அளித்து மீண்டும் விண்ணப்பம் அளிக்க அறிவுறுத்தலாம்.

    எக்காரணம் கொண்டும், சீல் வைக்கப்பட்ட அசல் விண்ணப்பத்தை திருப்பி அனுப்ப கூடாது. ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே விண்ணப்பத்தில் கேட்டால், தகவல் அளிக்க கூடாது. தகவல் அளித்த பின் ஓராண்டு வரை மேல்முறையீடு செய்யாமல் இருந்தால் கோப்புகளை முடிக்கலாம்.தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்ப காரணம் கூற வேண்டியதில்லை. கேட்கவும் கூடாது. இருக்கும் தகவலை அப்படியே வழங்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட தகவல்களை தயக்கமின்றி தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தினர்.

    பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் அறிவிக்கப்பட்ட 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் எந்த திட்டமும் முடிக்கப்படவில்லை எனவும், 5 மருத்துவமனை அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கவே இல்லை என்றும் ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது. #AIIMS
    புதுடெல்லி:

    பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014-ம் ஆண்டு மத்தியில ஆட்சிக்கு வந்தது. அதன்பின்னர் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2014-15, 2015-16 மற்றும் 2017-18 மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதில் எந்த ஒரு திட்டமும் முடிவடையும் வகையில் இல்லை என்றே தெரிகிறது. 

    குறிப்பாக 5 மருத்துவமனை அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 

    இந்தியா டுடே செய்தி நிறுவனம் ஆர்.டி.ஐ. தகவல் மூலம் பெற்றுள்ள தகவலில், தமிழகத்தில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மருத்துவமனையை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மருத்துவமனையை கட்டிமுடிக்க அமைச்சரவையின் காலக்கெடு இறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது என தமிழக அரசின் சார்பில் 20-ம் தேதி தெரிவிக்கப்பட்டது. இந்தியா டுடே மத்திய அமைச்சகத்திடம் இருந்து பெற்ற ஆர்.டி.ஐ. பதிலில் 21-ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.


     
    இதேபோன்று பிற மாநிலங்களில் திட்டத்தை முன்னெடுக்க ஆகும் தொகை எவ்வளவு? வழங்கப்பட்டது என்பது தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 1000 கோடிக்கும் அதிகமான செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிக பட்சமாக ரூ. 278.42 கோடி மேற்கு வங்காளத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு உள்ளது.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் கல்யாணியில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. ரூ. 1,754 கோடி செலவில் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது, ஆனால் ரூ. 278.42 கோடி மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை 2020-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால், இவ்விவகாரத்தில் பணிகள் துரிதமாக நடைபெற்றால் மட்டுமே திட்டமிட்டப்படி மருத்துவமனையை கட்டியமைக்க முடியும். இதேபோன்றுதான் பிற மாநிலங்களுக்கான அறிவிப்பும் உள்ளது. பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் மருத்துவமனை அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை எனவும் ஆர்.டி.ஐ. பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ×